வீணையின் நாதம்...

 
வீணையின் அடி நாதங்களில் 
ஒலிக்கும் இசை வெள்ளத்தில் 
முழ்கி இறந்துதான் போகிறேன்.....

ஒவ்வொரு முறையும் கேட்கையிலும் 
புதிதாய் பிறந்திட்ட உணர்வு!

இதயத்தின் கூட்டில் தேங்கிய
துயரமெலாம் உடைப்பெடுத்து ஓடுகின்றதே!

செய்த தவம்தான் என்னவோ 
என் தாய் தமிழ்நாட்டின் 
இசைதனை கேட்டிடவே!
 
 
--பிரியா