தனிமை...

 
வெளியெல்லாம் நட்சத்திரம் 
தனியாய் நிலவு 
கள்ளிச்செடியின் நுனியில் 
ஒற்றை மலர்

சலசலத்து ஓடும் 
நதியின் பாதையில் 
கொஞ்சம் கலந்திருக்கிறது 
தனிமையின் பாடலும் 

ஒற்றையாய் நீரருந்தும் 
இப்பறவைக்கும் உண்டு 
தனிமையின் வலி 
அறிந்தவர் எத்தனை 

வாழ்கையின் பாதையில் 
நடைபோடும் எனக்கு 
இவை மட்டுமே 
கண்முன் காட்சிகளாய் 

விவேகானந்தரின் வார்த்தைகள் 
தனித்து மட்டுமல்ல 
துணையாய் இருக்கும் 
பசியும் விழிப்பும்
 
 
 
--பிரியா