எழுதுகோல்...

 
நிதமும் எழுதுகிறேன் 
ஏதாகிலும் ஒன்றை 
எழுதுகோலின் துணையுடன் 
மனதின் கற்பனையை....

இன்று ஏனோ 
மாட்டேன் என்கிறது 
எனதருமை எழுதுகோல் 
என்னதான் செய்ய.....

அதனிடமே கேட்டேன் 
ஏனப்பா இன்றிப்படி 
என்னிடம் கோவித்து 
முகத்தை திருப்பியது...

விடவா முடியும்
எழுதுகோல் ஆயிற்றே?
மீண்டும் கேட்டேன் 
கரிசனம் கூட்டி...

லேசாய் கசிந்தது 
காற்றிலொரு குரல் 

எத்தனையோ எழுதுகிறாய் 
என்னை கொண்டு 
என்றாகிலும் தோன்றியதா 
என்னை எழுத?

வாயடைத்து நின்றேன் 
உண்மையன்றோ கேட்டது....

கற்பனைகள் உணதாகலாம் 
கவியாய் ஆகிடுமோ 
அவைகள் எல்லாம் 
எந்தன் துணையின்றி....

நியாயம்தானே கேள்வி 
அசைவற்றேன் நானும்... 
கேட்டது எழுதுகோல் 
கேட்காதவர் எத்தனையோ?

நன்றி மறப்பவராய் 
நாமாகிப் போகின்றோம் 
காலத்தின் போக்கினிலே 
பல்வேறு சமயங்களில்
 
 
--பிரியா