ஒற்றை இலை.....

 
நான் இலை
ஒற்றை இலை

மரத்தை பிரிந்து 
தனியே வந்தேன் 

காற்றுடன் கலந்து 
வழியே செல்கிறேன் 

தடைகளும் இல்லை 
தயக்கமும் இல்லை 

கட்டிப் போடவும் 
விலங்குகள் இல்லை 

எட்டிப் பறிக்கவும் 
எவரும் இல்லை 

எனக்கான வழியில் 
எல்லைகள் இல்லை 

சுற்றி திரிகிறேன் 
வெட்ட வெளியில் 

காற்றின் பாதையில் 
எந்தன் பயணம் 

இக்கிளையில் தொடங்கி 
அக்கிளையில் இளைப்பாறி 

நீண்டு நீண்டு 
இன்னும் நீண்டு 

தொடர்ந்தே செல்கிறேன் 
தொல்லைகள் இன்றி 

எந்தன் வாழ்க்கை
எந்தன் மகிழ்ச்சி 

பறக்கிறேன் நான் 
பாரங்கள் இன்றி
 
 
--பிரியா