நீயும் நானும்....

 
உன்னால் எழுதப்பட்ட
கவிதைகள் எல்லாம்
வெறும் காகிதமாய் !

உனக்காய் காத்துகிடந்த 
பூஞ்சோலைகள் அனைத்தும் 
பூக்களற்ற செடியாய்!

உன்னுடன் கால்பதிய 
நடந்த சாலைகளெல்லாம் 
இன்று கட்டாந்தரையாய் 

எப்படி புரியவைப்பேன் உனக்கு 
நீயல்லாமல் நான்
அர்த்தமற்ற வார்த்தையென்று!