பிறந்தநாளில்...

 
காணிநிலம் கேட்டு நின்றாய் 
பலகாணி நிலங்கள் உனக்காய் 
காத்து நிற்கின்றன காண்...

மேவிய ஆறுகளால் மட்டுமல்ல 
உன் தமிழாலும் செழிக்கிறது 
நீ போற்றிய தமிழகம் 

நாங்கள் எழுதும் எழுத்தெல்லாம் 
உன் கவிமீதுள்ள காதலால் 
தமிழ்மீது வந்த காதல் 

உன் கனவு பழித்திடவே 
கவி புனைந்து நிற்கின்றோம் 
நின்றான் வழிவந்த மடந்தைகள் 

புவிபோற்றும் கவி படைக்க 
ஆசிகள் கேட்டு நிற்கின்றோம் 
நீ புவிபார்த்த நன்னாளில்.......
 
 
--பிரியா