என் முண்டாசு கவிஞனுக்கு

 
முறுக்கிய மீசையிலும் 
ஏற்றிய புருவத்திலும் 
வீரத்தை விதைத்தவன் - நீ

பேசிய மொழிதனிலே 
வீசிய வார்த்தைகளிலே
அறப்போர் புரிந்தவன் - நீ

விடுதலை முழக்கதினையே
தமிழ் வீதியெங்கும் 
வீசித் தெளித்தவன் - நீ

கனலின் வீரத்தினை
எம் பிள்ளைபருவத்திலே
கற்றுக் கொடுத்தவன் - நீ

நீ தந்த தமிழால்
இவ்விடுதலை திருநாளில் 
உனக்காய் சிறு சமர்ப்பணம்

வாழ்க உன் புகழ்
மொழியுள்ள காலமெல்லாம் 
தமிழுள்ள காலமெல்லாம்
 
 
-- பிரியா