எங்களையும் கொஞ்சம்...

ஓ வண்ணத்துப்பூச்சியே!
 
சிறகடிக்கும் நீ
சிறகின் வர்ணங்களோடு 
எங்கள் சோகங்களையும் 
எங்காவது கொண்டு செல்!

ஓ வான்மேகமே!

சுமந்து வந்த தூறலோடு 
எங்களுக்காய் கொஞ்சம் 
இன்பங்களையும் சேர்த்து 
தூவிவிட்டு போ!

ஓ சூரியனே !

ஒளிவீசும் கதிர்களால் 
எங்கள மனங்களையும் 
நனைத்து கொஞ்சம் 
ஒளிரச் செய்!

ஓ தென்றலே!

பூவினை தீண்டியதுபோல் 
எங்களையும் கொஞ்சம் 
செல்லமாய் தீண்டி 
சோகங்களை தீர்த்து செல்!

ஓ இயற்கையே!

உன் கொடைகளை
எங்களுக்கு அளித்து 
உன்னைப்போல் எங்களையும் 

மிளிரச் செய்!

 

 

--பிரியா