ஒரு பாடல்...............

 
இன்று ஒரு பாடல் கேட்டேன்...  ஒரு இசை எப்படி இருக்க வேண்டுமோ அந்தஅனைத்தும் அது நிறைவு செய்வதாக எனக்கு தோன்றியது... ஒரு இசை எப்படி இருக்க வேண்டும் நம் செவிகளின் வழியே புகுந்து இதயத்தைஅடைந்து நரம்புகளில் உணர்வேற்ற வேண்டும்... உங்களை தன்னிலை மறக்க செய்ய வேண்டும்...நாம் நமது சூழல் தன்னிலை அனைத்தும் மறந்து அந்த பாடலுடன் ஒன்றி போக வேண்டும்.. இன்று அதை நான் உணர்ந்தேன்... என் அறையின் என் இருக்கையில் அமர்ந்திருத்த என் கண்களின் முன்னே பச்சை வயல்களும் கடல்களும் விரிந்து பறந்தன... நான் என் முன்னே அனைத்தும் உணர்ந்தேன்... இது அந்த பாடலின் இசையின் தாக்கமா பாடிய குரலின் தாக்கமா அல்லது பாடல் வரிகளின் தாக்கமா எதை சொல்ல ... எதையுமே தனித்து பிரிக்க முடியாத படிக்குஅனைத்தும் ஒன்றுடன் ஒன்றாக பின்னி பிணைந்திருந்தது... இன்று எனக்கு சிறகுகள் முளைத்தன அந்த பாடலால் நான் பறந்தேன்அந்த காட்சிகளின் மீது.... ரசித்து வியந்தேன் உலகம் இவ்வளவு அழகா என்ன...இவை அனைத்தும் ஒரு பாடலின்வழி எங்கனம் சாத்தியம்... வியப்புதான் நினைக்கையில்....